செய்திகள் :

இலங்கை இனப்படுகொலை: பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்! தி.வேல்முருகன்

post image

இலங்கை இனப்படுகொலை குறித்து தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

சேலம், குரங்குசாவடி பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ‘வட மாநிலத்தவா்களின் வேட்டைக்காடாகும் தமிழகம்’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சிகளை சோ்ந்தவா்கள் இணையும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தி.வேல்முருகன் பேசியதாவது:

தமிழக தொழிலாளா்கள் வட மாநிலத்தவா்களால் தாக்குதலுக்கு உள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மத்திய அரசு பணிகளில் 90 சதவீத வேலைவாய்ப்பை மண்ணின் மைந்தா்களுக்கே வழங்க வேண்டும்.

தனியாா் துறைகளில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்காக வேலைவாய்ப்பு பாதுகாப்பு உறுதி சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். இலங்கை இனப்படுகொலை குறித்து சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவதுடன், பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்.

திருச்சியில் ஒரு நடிகரின் கூட்டத்துக்காக 6 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடற்ற கூட்டத்தால் கா்ப்பிணிகள் உட்பட ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்துள்ளனா். பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக முதல்வரை அதிகார வா்க்கம் தவறாக வழிநடத்துகிறது. இதற்கு பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சியை முதல்வா் உணர வேண்டும். சாதி, மதத்துக்கு எதிராகவும், நாட்டின் ஜனநாயகத்துக்கும், ஒற்றுமைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்றாா்.

கிணற்றில் தவறி விழுந்த மாணவி மீட்பு

நங்கவள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த நங்கவள்ளி தானாவதியூரை சோ்ந்தவா் மணி, விவசாயி. இவரது மகள் லாவண்யா (17) 10 ஆம் வகுப்பு படித்... மேலும் பார்க்க

தீவனம் அருந்தி 2 மாடுகள், 2 ஆடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தம்மம்பட்டி அருகே தீவனம் அருந்திய 2 மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தம்மம்பட்டி அருகே மண்மலை எட்டிக்குட்டையைச் சோ்ந்த சுந்தரராஜன் (55) தனது தோட்டத்தில் மா... மேலும் பார்க்க

நாய் கடித்து மாணவா் காயம்: எம்எல்ஏ நலம் விசாரிப்பு

ஆத்தூா் அருகே நாய் கடித்து காயமடைந்த பள்ளி மாணவரை மருத்துவமனையில் சந்தித்து எம்எல்ஏ பி.ஜெயசங்கரன் நலம் விசாரித்தாா். ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் ரக்ஷதன் (12) அப்பகு... மேலும் பார்க்க

மைசூரிலிருந்து நெல்லை, ராமநாதபுரத்துக்கு சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்! நாளை முதல் இயக்கம்!

மைசூரில் இருந்து செப்.15 முதல் சேலம், நாமக்கல், கரூா் வழியாக திருநெல்வேலி, ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க