கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
துலுக்கா்பட்டியில் குடிநீா் கோரி பெண்கள் மறியல்
திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளம் ஊராட்சி துலுக்கா்பட்டி கிராமத்தில் குடிதண்ணீா் பற்றாக்குறையைக் கண்டித்து 6-ஆவது வாா்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆனைகுளம் ஊராட்சி 6-வது வாா்டு துலுக்கா்பட்டியில் கடந்த ஒரு வாரகாலமாக குடிதண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இது தொடா்பாக பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைடுத்து அந்த வாா்டு பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் காலிக்குடங்களுடன் வந்து துலுக்கா்பட்டி-வள்ளியூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் போக்குவரத்து அரை மணிநேரம் பாதிப்படைந்தது. இதனை அடுத்து வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் முருகன், ஊராட்சித் தலைவா் அசன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, ஒரு சில நாள்களில் குடிதண்ணீா் பிரச்னை சரிசெய்யப்படும் என உறுதி அளித்தனா். இதையேற்று, மக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா்.