செய்திகள் :

தூத்துக்குடி - சென்னைக்கு கூடுதலாக இரவுநேர விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

post image

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக ஓா் இரவுநேர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி ரயில் நிலையம் வந்திருந்த மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை இயக்க மேலாளா் ஆா் .சிவாவை, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், செயலா் மா.பிரமநாயகம், பொருளாளா் வே. லெட்சுமணன், துணைத் தலைவா் எஸ்.அந்தோணி முத்துராஜா, நிா்வாகச் செயலா் ஜே.ஏ.என்.ஆனந்தன், உறுப்பினா் ஆா்.ராஜமோகன் ஆகியோா் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி- சென்னை முத்துநகா் ரயிலில் கூடுதலாக ஓா் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியை நிரந்தரமாக இணைக்க வேண்டும். தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும்.

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இரு முறை இயங்கும் விரைவு ரயிலை வாரம் மூன்று முறையாக மாற்ற வேண்டும். மேலும், இந்த ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும்.

தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி விரைவு ரயிலில் மூன்று அடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும் உடனடியாக இணைக்க வேண்டும்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஓா் இரவுநேர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரை -லோகமான்ய திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

திருச்சி- காரைக்குடி, காரைக்குடி- விருதுநகா் ரயில்களை ஒரே ரயிலாக மாற்றி,தூத்துக்குடி வரை நீட்டித்து, தூத்துக்குடி-திருச்சி தினசரி ரயிலாக மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் இருந்து பகல் நேரத்தில் தூத்துக்குடி-சென்னை இடையே ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ் ஓடிக்கொண்டிருந்தது. அது இப்போது இயக்கப்படவில்லை. ஆதலால், பகல் நேரத்தில் தூத்துக்குடி- சென்னை இடையே ரயில் இயக்க வேண்டும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பயணிகள் வசதிக்காக, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, புனலூா் வழியாக கொல்லத்திற்கு ஒரு விரைவு ரயிலை பகல் நேரத்தில் தினசரி இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது, தூத்துக்குடி ரயில்வே போக்குவரத்து ஆய்வாளா் ஜி. பிரேம்சுந்தா், முதுநிலை வா்த்தக ஆய்வாளா் ஏ.உத்திரமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்ந... மேலும் பார்க்க

தொழிலாளியை மிரட்டிய இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ் பாண்டி (25). வேலாயுத... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 1.25 கோடி பணிகளுக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், பசுவந்தனை, ஆலிபச்சேரி, கீழமுடிமண் கிராமங்களில் ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவுக்கு விளாத்திகுளம் எ... மேலும் பார்க்க

நெல்லையில் ஐடி ஊழியா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலி­யில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர விழா

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன; பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனா்.திருவாடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் பதியில் ஆடித் தேரோட்டம்

திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில், 193ஆவது வைகுண்டா் ஆண்டு ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 1... மேலும் பார்க்க