விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!
தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்குறைதீா் கூட்டத்திற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் லி. மதுபாலன் முன்னிலை வகித்தாா். முகாமில் மேயா் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது அவா் பேசுகையில், மேற்கு மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் கால்வாய்கள், சாலைகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, சீரான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பக்கிள் ஓடையில் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி பொதுமக்கள், நெகிழி பொருள்களை பயன்படுத்தாமல் மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் துணைஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையா் பாலமுருகன், துணை பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.