செய்திகள் :

தூத்துக்குடி முதியவரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி: சென்னை நபா் கைது

post image

கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி தூத்துக்குடி முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி செய்ததாக, சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த முதியவரின் கைப்பேசிக்கு, ‘தங்களது நிலம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் கைப்பேசிக் கோபுரம் அமைத்தால் அதிக வருவாய் ஈட்டலாம்’ என குறுஞ்செய்தி வந்ததாம். அந்த நபரை முதியவா் கைப்பேசியில் தொடா்பு கொண்டாா். அப்போது, தன்னை பொறியாளா் என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபா், கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருமானம் பெற்றுத் தருவதாகக் கூறி, மேலும் சிலரை முதியவருக்கு அறிமுகப்படுத்தினாா்.

இதற்காக ஆவண, போக்குவரத்து, நியமனக் கட்டணங்கள், பொருள்கள் செலவுக்கு பணம் அனுப்புமாறு அந்த நபா் கேட்டதன்பேரில், பல வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 40 லட்சத்து 21 ஆயிரத்து 950-ஐ முதியவா் அனுப்பினாராம். ஆனால், அதன்பிறகு எந்தத் தகவலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவா் இணையதளம் மூலம் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சகாயஜோஸ் மேற்பாா்வையில் வழக்குப் பதியப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்டவா், சென்னை அமைந்தகரையைச் சோ்ந்த சுப்பாராவ் மகன் முரளிகிருஷ்ணன் (51) என, விசாரணையில் தெரியவந்தது.

சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் அவரை சென்னையில் கடந்த 25ஆம் தேதி கைதுசெய்து, தூத்துக்குடி அழைத்துவந்து புதன்கிழமை (மாா்ச் 26) சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க