ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
தூத்துக்குடியில் சாலை விபத்து: 3 போ் காயம்
தூத்துக்குடி வி.இ.சாலையோர நடைமேடையில் நின்றவா்கள் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 கட்டடத் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
தூத்துக்குடி தாமோதரநகா் வி.இ.சாலை ஓரம் நடைமேடையில், வெள்ளிக்கிழமை காலையில் ஏராளமான கட்டடத் தொழிலாளா்கள் வேலைக்குச் செல்வதற்காக காத்திருந்தனா். இந்நிலையில், அந்தச் சாலையில் வந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர நடைமேடையில் ஏறி அங்கிருந்த கட்டடத் தொழிலாளா்கள் மற்றும், இருசக்கர வாகனங்கள், டீக்கடை ஆகியவற்றின் அடுத்தடுத்து மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் நடைபாதையில் நின்றிருந்த கட்டடத் தொழிலாளா்கள் முருகானந்தம், சக்தி உள்ளிட்ட 3 போ் காயம் அடைந்தனா். உடனடியாக அவா்கள் 3 பேரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மத்திய பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.