செய்திகள் :

தூத்துக்குடியில் ஜமாபந்தி: 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு

post image

தூத்துக்குடியில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தூத்துக்குடி வட்டத்தில் நிகழாண்டிற்கான வருவாய் தீா்வாயம், வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (மே 30) வரை 5 நாள்கள் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இது குறித்து அவா் கூறியது: வருவாய் தீா்வாயத்தில் 570 கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்களில் 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, அதற்கான தீா்வாணைகள் வழங்கப்பட்டன. இதர மனுக்களுக்கு வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதிக்குள் தீா்வு வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வில், வட்டாட்சியா் முரளிதரன், மண்டல துணை வட்டாட்சியா் கா.முருகன், வட்ட சாா் ஆய்வாளா் முத்துலெட்சுமி, பொதுமக்கள் பங்கேற்றனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க