ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
தூத்துக்குடியில் ஜமாபந்தி: 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு
தூத்துக்குடியில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
தூத்துக்குடி வட்டத்தில் நிகழாண்டிற்கான வருவாய் தீா்வாயம், வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (மே 30) வரை 5 நாள்கள் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இது குறித்து அவா் கூறியது: வருவாய் தீா்வாயத்தில் 570 கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மனுக்களில் 120 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, அதற்கான தீா்வாணைகள் வழங்கப்பட்டன. இதர மனுக்களுக்கு வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதிக்குள் தீா்வு வழங்கப்படும் என்றாா்.
இந்நிகழ்வில், வட்டாட்சியா் முரளிதரன், மண்டல துணை வட்டாட்சியா் கா.முருகன், வட்ட சாா் ஆய்வாளா் முத்துலெட்சுமி, பொதுமக்கள் பங்கேற்றனா்.