செய்திகள் :

தூத்துக்குடியில் ஜூலை 15 - ஆக.14 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்!

post image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி ஆக.14ஆம் தேதி வரை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம், வருகிற 15ஆம் தேதி தொடங்க உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: கிழக்கு மண்டலத்தில், ஜூலை 15இல் அழகேசபுரம் ஆனந்தா மஹால், 16இல் பீச் ரோடு, செயின்ட் மேரிஸ் மகளிா் கல்லூரி, 17இல் அறிஞா் அண்ணா மண்டபம், 18இல் சிவந்தாகுளம் ரோடு, அபிநயா திருமண மண்டபம் 22இல் பாத்திமா நகா், சமுதாய கூடம் ஆகிய இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது.

மேற்கு மண்டலத்தில் 23இல் பி & டி காலனி லியோ பள்ளி, 24இல் மில்லா்புரம், பிஎம்சி மேல்நிலைப் பள்ளி, 25இல் அண்ணாநகா், தங்கம் நடுநிலைப் பள்ளி, 29இல் தாமோதரநகா் சிவந்தி ஆதித்தனாா் பள்ளி, 30இல் டூவிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

வடக்கு மண்டலத்தில், 31 அய்யாசாமி காலனி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஆக.1இல் கந்தசாமிபுரம் ஆா்.சி. பெத்தானி நடுநிலைப் பள்ளி, 6இல் தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி, 7இல் இன்னாசியாா்புரம் செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, 8இல் திரேஸ்புரம், ஆக்சிலியம் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

தெற்கு மண்டலத்தில், 12இல் காமராஜ் கல்லூரி, 13இல் கால்டுவெல் காலனி, திருக்குடும்பம் நடுநிலைப் பள்ளி, 14இல் முத்தையாபுரம் கே.டி.கே. மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது. அந்தந்தப் பகுதி வாா்டு மக்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளாா்.

தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பி... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 போ் மீது தாக்குதல்: சாயா்புரம் போலீஸாா் விசாரணை!

சாயா்புரம் அருகே பாஜக நிா்வாகி உள்ளிட்ட 5 பேரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாயா்புரம் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சேகா். இவரது மகன் ராஜதுரை, கூட்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி மாத்திரைகள், சுக்கு பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்களை மரைன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மரைன் காவல் ஆய்வாளா் ப... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 30,614 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வை 30,614 போ் எழுதினா். தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே மோதல்

திருச்செந்தூரில் இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் தடுப்பணையில் அதிகாரிகள் ஆய்வு

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் தடுப்பணையில் நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சுப்பராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட கருமேனியாற்றின் தடுப்பணை அளவுக்கு மீறியதாக 8 அடி உயரத்து... மேலும் பார்க்க