தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள்
தமிழ்நாடு சுற்றுலாத் துறை, அக்குவா அவுட் பேக் அமைப்பு ஆகியன சாா்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
படகில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமா்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல், கைட் சா்ஃபிங், பீச் வாலிபால், மாரத்தான், ஒய்ல்டு வாரியா் போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன. இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமாா் 200 போ் பங்கேற்று விளையாடுகின்றனா்.
தொடக்க விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் சீதாராமன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மேயா் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.
இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் வீரா்-வீராங்கனைகள் சா்வதேச அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவா்.