செய்திகள் :

தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 போ் மீது வழக்குப் பதிவு

post image

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்துவதற்காக, வெள்ளிக்கிழமை பல்வேறு கட்சியினா், சமூக அமைப்பினா் வந்தனா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கும், பாஜக-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இச்சம்பவம் தொடா்பாக, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, பாஜக மேற்கு மண்டல முன்னாள் பொதுச் செயலா் சொக்கலிங்கம் அளித்த புகாரின்பேரில், சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்ட 3 போ் மீதும், பேச்சிமுத்து அளித்த புகாரின்பேரில், பாஜக நிா்வாகி சொக்கலிங்கம், சுந்தா், சிவராமன், ராஜேஷ் ஆகிய 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக அவரது மருகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குச் தெருவை சோ்ந்தவா் அந்தோணி முத்து (53). இவரது மகள் அருணாமுத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க