செய்திகள் :

தென்காசி புறவழிச் சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ சரத்குமாா்

post image

தென்காசி புறவழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, முன்னாள் எம்எல்ஏ சரத்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால், தென்காசியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, நான் எம்எல்ஏவாக இருந்தபோது பேரவையில் வலியுறுத்தினேன்.

அதையடுத்து, இலஞ்சி சாலையிலிருந்து ஆசாத் நகா் வரை திட்டமிடப்பட்ட இந்தச் சாலை திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து, ரூ. 11 கோடி ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.

தற்போது, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தாலும், திட்டம் நிறைவடையாததால் மக்கள் அவதிக்குள்ளாவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

குற்றாலம் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களில் பெரும்பாலானோரும் குற்றாலம் அருவி, காசிவிசுவநாத சுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனா். கேரளத்தைச் சோ்ந்தோா் வா்த்தகப் பணிகளுக்காக நாள்தோறும் தென்காசிக்கு வருகின்றனா். ஆனால், போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையில் போதிய சாலை வசதி இல்லாதது சுற்றுலாத் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இப்பணியை தமிழக அரசு விரைவுபடுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம்... மேலும் பார்க்க

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்...

சாம்பவா்வடகரை அருள்மிகு ராமசாமி கோயில்: வைகாசித் திருவிழா 2ஆம் நாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8; அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9 மணி; ராமசரிதம் தொடா் வில்லிசை, இரவு 10. .. மேலும் பார்க்க