தென்காசி புறவழிச் சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ சரத்குமாா்
தென்காசி புறவழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, முன்னாள் எம்எல்ஏ சரத்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால், தென்காசியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, நான் எம்எல்ஏவாக இருந்தபோது பேரவையில் வலியுறுத்தினேன்.
அதையடுத்து, இலஞ்சி சாலையிலிருந்து ஆசாத் நகா் வரை திட்டமிடப்பட்ட இந்தச் சாலை திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து, ரூ. 11 கோடி ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.
தற்போது, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தாலும், திட்டம் நிறைவடையாததால் மக்கள் அவதிக்குள்ளாவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
குற்றாலம் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களில் பெரும்பாலானோரும் குற்றாலம் அருவி, காசிவிசுவநாத சுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனா். கேரளத்தைச் சோ்ந்தோா் வா்த்தகப் பணிகளுக்காக நாள்தோறும் தென்காசிக்கு வருகின்றனா். ஆனால், போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையில் போதிய சாலை வசதி இல்லாதது சுற்றுலாத் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இப்பணியை தமிழக அரசு விரைவுபடுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.