செய்திகள் :

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் 3-ஆம் கட்ட கலந்தாய்வு

post image

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 3-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2025-26-ஆம் கல்வியாண்டின் இளநிலை மாணவா்களுக்கான 3-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது.

இதில், பி.காம்., பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கும், பி.எஸ்சி., இயற்பியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஏற்கெனவே நடைபெற்ற முதல் மற்றும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் விடுபட்ட மாணவா்கள், மே 29-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தோா் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், சோ்க்கைக் கட்டணம், மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் காலை 9 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 727 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 727 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதிய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. செய்யாறு வ... மேலும் பார்க்க

கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு

ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். கலவை, குப்பிடிச்சாத்தம் ... மேலும் பார்க்க

பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன. பல்லாந்தாங்கல் ஊராட்சியி... மேலும் பார்க்க