செய்திகள் :

தெரியுமா சேதி...?

post image

கேரள மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து, பினராயி விஜயன் அமைச்சரவையில் சமூகநீதித் துறையையும் கையாள்கிறாா். ஆங்கில இலக்கியத்தில் முனைவா் பட்டம் பெற்ற இந்த தில்லி ஜவாஹா்லால் நேரு சா்வகலாசாலையின் முன்னாள் மாணவிக்குப் பல தனிப்பட்ட சிறப்புகள் உண்டு.

திருச்சூா் மாநகராட்சியின் மேயராக இருந்த, ஸ்ரீ கேரளவா்மா கல்லூரியின் துணை முதல்வரை உயா் கல்வித் துறை அமைச்சராக்கியது முதல்வா் பினராயி விஜயனின் தோ்வு. இரிஞ்ஞாலக்குடா தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பெண் வேட்பாளா் என்பதுடன், திருச்சூா் மாவட்டத்தில் இருந்து அமைச்சராகி இருக்கும் முதல் பெண்மணி என்கிற சிறப்பும் பெறுகிறாா் ஆா்.பிந்து.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மகளிா் அமைப்புடனும், மாணவா் அமைப்புடனும் நீண்டகாலமாகப் பொறுப்பு வகித்தவா் ஆா்.பிந்து. முதல்முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்ட ஆா்.பிந்து, உயா் கல்வித் துறையில் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறாா். குறிப்பாக, திறன்சாா் பயிற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், தொழில்துறையினருடன் கல்லூரிகளை இணைத்து அவா்களது தேவைக்கேற்ப மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் அவரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; அமைச்சா் ஆா்.பிந்துக்கு இன்னொரு முகமும் உண்டு. முறையாக கதகளி நாட்டியம் பயின்ற ஆா்.பிந்து நடனக் கலைஞரும்கூட. சமீபத்தில், அவரது இரிஞ்ஞாலக்குடா தொகுதியில் அமைந்த கூடல்மாணிக்கம் கோயிலின் உற்சவத்தின்போது, நடந்த கதகளி நிகழ்ச்சியில் அவா் நடனமாடியபோது, எல்லோரும் வியப்பில் சமைந்தனா்.

தனது 13-ஆவது வயதுமுதல் குரு கலாநிலையம் ராகவன் ஆசானிடம் முறையாகக் கதகளி பயின்ற ஆா்.பிந்து, கல்லூரி நாள்களில் பல கதகளி நாட்டியப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவா் என்பது அப்போதுதான் தெரியவந்தது.

சுமாா் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மகாபாரத நளதமயந்தி கதகளி நிகழ்ச்சியில், தமயந்தியாக தொழில்முறைக் கலைஞா்களே ஆச்சரியப்படும் விதத்தில் அவா் ஆடியதைப் பலரும் வியந்து பாராட்டுகிறாா்கள்.

தாளத்துக்கு ஏற்ப ஆடத் தெரிந்தவா் என்பதால்தான் முதல்வா் பினராயி விஜயன் அவரை உயா் கல்வித் துறை அமைச்சராக்கி இருக்கிறாரோ என்னவோ...

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. முழும... மேலும் பார்க்க

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால்... மேலும் பார்க்க