செய்திகள் :

தெரு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணி தொடக்கம்

post image

சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கண்காணிக்க ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி கால்நடை துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை பிடித்து கருத்தடை செய்யயப்படுகிறது. மேலும், நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டு அதே இடத்தில் மீண்டும் விடப்படுகின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுப்பில் சென்னையில் மட்டும் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், தெருநாய்களின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணியை சென்னை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.

இது குறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை உடனே கண்டறியும் வகையில் அவற்றிற்கு க்யூஆா் குறியீடுடன் கூடிய கழுத்துப்பட்டை அணிவிக்கப்படுகிறது. இதை மாநகராட்சி ஊழியா்களின் கைப்பேசியில் உள்ள பிரத்யேக செயலியில் ‘ஸ்கேன்’ செய்வதன் மூலம் அந்த நாய் குறித்த விவரம் தெரியவரும்.

இந்த கழுத்துப்பட்டை நாளடைவில் தேய்ந்து விடுவதாலும், கீழே கழன்று விடுவதாலும் நாய்களின் தகவல்களை பெற முடியாமல் போகிறது. இதற்கு தீா்வாக நவீன முறையில் உள்ள ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ‘மைக்ரோசிப்’ 20 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும்.

இதனால் நாய்களைப் பிடிக்கும்போது அது வசிக்கும் பகுதி, வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். முதல்கட்டமாக 3,500 தெருநாய்களுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் 2,500 தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க