செய்திகள் :

தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை

post image

தெரு நாய்கள் தொடர்பான விவகாரத்தில் தெரு நாய்களுக்கு நன்றியுள்ளவராக இருக்க கடமைப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி விக்ரம் நாத் பேசுகையில்,

நீண்ட காலமாக எனது வேலைகளுக்காக சிறு வட்டாரத்திற்குள்ளாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால், தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக, இந்த நாட்டில் மட்டுமல்ல - உலகெங்கிலும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த அங்கீகாரத்துக்காக தெரு நாய்களுக்கும் நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.

இந்த வழக்கை எனக்கு ஒதுக்கிய தலைமை நீதிபதிக்கும்(பி. ஆர். கவாய்) நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.

நாய்களை நேசிப்பவர்கள்தவிர, நாய்களும் எனக்கு வாழ்த்துகளை வழங்குவதாகவும் எனக்கு செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதிக்கான வரிசையில் இடம்பெறும் விக்ரம் நாத் தான், தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் வெளியான உத்தரவை மாற்றியமைத்தவர்.

இதையும் படிக்க:புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

Stray dogs case made me known globally: Supreme Court Justice Vikram Nath

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்க... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு... மேலும் பார்க்க

அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை: வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே மழை, வெள்ளத்தால் திணறி வரும் வட இந்திய மாநிலங்களுக்கு அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

வாரணாசி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தாக்கல் செய்த மனு மீதான அடுத்த விசாரணை செப்டம்பர் 3-ஆம் தேதி அலாகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிர்ணயித்தது. ... மேலும் பார்க்க

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை கால... மேலும் பார்க்க