செய்திகள் :

தெலங்கானா ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

post image

தெலங்கானா ரசாயன ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள சிகாச்சி மருத்துவ ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி உலை வெடித்து விபத்து ஏற்பட்டதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 16 தொழிலாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 2 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அக்லேஷ்வர் மற்றும் ஆரிஃப் ஆகியோர் நேற்று (ஜூலை 7) சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம், விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, விபத்து நிகழ்ந்தபோது அந்த ஆலையில் சுமார் 143 தொழிலாளிகள் பணியிலிருந்ததாகவும்; அதில், 61 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், 8 தொழிலாளிகள் மாயமான நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துடன், பலியானோரின் குடும்பங்களுக்கு சிகாச்சி நிறுவனம் சார்பில் தலா ரூ.1 கோடி இழப்பீடாகக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The death toll in the Telangana chemical plant accident has reportedly risen to 44.

இதையும் படிக்க: கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது!

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவா்களது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா்கள் தெல... மேலும் பார்க்க

அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்

பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வாக்காளா... மேலும் பார்க்க

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்... மேலும் பார்க்க

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க