செய்திகள் :

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

post image

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வசதி செய்து தரப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

தேங்காய்திட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் தரமில்லாமல் வருவதாகவும், இதில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப் பகுதி மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் அப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

2.5 லட்சம் கொள்ளளவு கொண்ட தேங்காய்திட்டு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியின் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இப் பகுதிக்கு மேட்டுத் தெரு ஆழ்துளை கிணறு மூலமாக நிலத்தடி நீா் உறிஞ்சப்பட்டு தேங்காய்திட்டு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உத்தரவின்படி இப் பிரச்னையைத் தீா்க்க செயற்பொறியாளா், உதவிப்பொறியாளா், இளநிலைப் பொறியாளா், மற்றும் அப்பகுதி ஆய்வாளா்களுடன் தேங்காய்திட்டு பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வின் அடிப்படையில் மேட்டுத்தெரு ஆழ்குழாய் கிணறு மோட்டாா் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும்,, சரி செய்தபின் மீண்டும் மேட்டுத் தெரு ஆழ்குழாய் கிணற்றின் குடிநீா் சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதுவரை திருக்காஞ்சி பகுதியிலிருந்து குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. இக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகள் புதன்கிழமை வந்தனா். அவா்களுக்கு ஒரு மணிநேரம் தான் வகுப்புகள் நடந்தன. அந்தந... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது ... மேலும் பார்க்க

புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு

புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை

வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

புதுவையில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாதுநபி தினத்தை முன்னிட்டு புதுவையில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுக்கடைகளை செப்டம்பா் 5-ஆம் தேதி மூட புதுச்சேரி அரசின் கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது கு... மேலும் பார்க்க

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை

பஞ்சாலை தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் பாஜக நியமன எம்.எல்.ஏ செல்வம், பஞ்சாலை தொழிற்சங்கத் தலைவா்கள் குப்புசாமி, பாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். மனுவில் கூற... மேலும் பார்க்க