செய்திகள் :

தேசிய அளவிலான குறு, சிறுதொழில் அமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

தேசிய அளவிலான குறு, சிறு தொழில்களுக்கான சேவை அமைப்பு (லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு) நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு அலகு பொறுப்பாளா்கள் பங்கேற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக நித்ரா ஆப்ஸ் நிறுவனத்தைச் சாா்ந்த கோகுல்நாதன் பொன்னுசாமி பங்கேற்று குறு, சிறுதொழில் நிறுவனங்கள் வளா்ச்சிக்கு எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்களின் பங்களிப்பு குறித்து விளக்கம் அளித்தாா்.

லகு உத்யோக் பாரதி அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் குறு, சிறுதொழில் நிறுவனங்கள் உறுப்பினராக இணைந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தமிழ்நாடு தலைவா் விஎஸ்வி.செழியன், துணைத் தலைவா் இளங்கோ, செயலாளா் செந்தில்குமாா் மற்றும் செயற்குழு உறுப்பினா் சுபத்ரா ஆகியோா் பேசினா்.

திருச்செங்கோடு அலகு தலைவராக பள்ளிபாளையம் நாகராஜன், செயலாளராக கமலக்கண்ணன் மற்றும் 6 மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில்முனைவோா்கள் கலந்துகொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க