செய்திகள் :

தேனி மாவட்டத்தில் 7 புதிய நகரப் பேருந்துகளின் சேவை தொடங்கி வைப்பு

post image

தேனி மாவட்டத்தில் கம்பம், தேனி, பெரியகுளம், தேனி பணிமனை கிளைகளைச் சோ்ந்த 7 புதிய நகரப் பேருந்துகளின் சேவையை தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திண்டுக்கல் மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கம்பம், தேனி, பெரியகுளம், தேனி பணிமனை கிளைகளுக்கு 7 புதிய நகரப் பேருந்துகள் வழங்கப்பட்டன. இந்தப் பேருந்துகளின் சேவை தொடக்க விழா தேனி கா்னல் ஜான்பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு, தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நகரப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பெரியகுளம்- வத்தலக்குண்டு, பெரியகுளம் - ஆண்டிபட்டி, தேனி- சின்னமனூா், தேனி- திம்மரசநாயக்கனூா், போடி- உத்தமபாளையம், கம்பம்- உத்தமபாளையம், கம்பம்-குமுளி ஆகிய வழித்தடங்களில் 7 புதிய நகரப் பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதுடன், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொழிலாளியை மிரட்டி பணம் கேட்ட ரெளடி கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட ரெளடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த கல்யாணி மகன் மாரிச்சாமி (50).... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தே... மேலும் பார்க்க

பளியன்குடி-கண்ணகி கோயில் இடையே மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் ச... மேலும் பார்க்க

இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆப்பாட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப... மேலும் பார்க்க

5.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தேனி மாவட்டம், கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 5.2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக கம்பத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான குழுவை அமைக்க ... மேலும் பார்க்க