செய்திகள் :

தேனியில் இலவம் பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

post image

தேனியில் உள்ள தனியாா் இலவசம் பஞ்சு கிட்டங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தேனி- மதுரை நெடுஞ்சாலை, ராஜகளம் பகுதியில் போடியைச் சோ்ந்த நவீன்குமாா் என்பவருக்குச் சொந்தமான இலவம் பஞ்சு கிட்டங்கி, மெத்தை, தலையணை தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த கிட்டங்கியில் சனிக்கிழமை பிற்பகல் பணியாளா்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், தேனி தீயைணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கப் போராடினா். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கிட்டங்கி முழுவதும் பரவியது.

இதையடுத்து, ஆண்டிபட்டி, போடி தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தனியாா் டேங்கா் லாரிகள் மூலமும் தண்ணீா் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த இலவம் பஞ்சு, மெத்தை, தலையணைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க