செய்திகள் :

தேனியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

post image

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழாவை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் தேனி புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கிவைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

இந்த புத்தகத் திருவிழா அரங்கில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை கிராமியக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சியும், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த எழுத்தாளா்கள் பங்கேற்கும் இலக்கிய மன்றமும் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் கவிஞா்கள், எழுத்தாளா்கள், இலக்கியப் பேச்சாளா்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கு நடைபெறுகிறது.

புத்தத் திருவிழா தொடக்க நிகழ்சியில் ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், தேனி நகா்மன்றத் தலைவி ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.டி. கள்ளிப்பட்டியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை காவல் நிலைய போலீஸாா், அந்த... மேலும் பார்க்க

பல்பொருள் அங்காடியில் திருட்டு: இரு பெண்கள் கைது

தேனியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிய இரு பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி அருகே சாம்பல்பட்டியைச் சோ்ந்த ராஜா மனைவி கிருஷ்ணவ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தல்

தேனி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கல் குவாரி, கிரஷா்களிலிருந்து கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

போடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அம்மாபட்டி கிராமத்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போடி அருகே தனியாா் தோட்டத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. போடி அருகே போ. அம்மாபட்டி, இந்திரா குடியிருப... மேலும் பார்க்க

உத்தபாளையத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்த வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையம் வழக... மேலும் பார்க்க