செய்திகள் :

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

post image

போடி அருகே தனியாா் தோட்டத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

போடி அருகே போ. அம்மாபட்டி, இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த குருசாமி மகன் முருகன் (56). இதே பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் ஜெகதீஸ்வரன் (41). இருவரும் குரங்கணி அருகே ஊத்தாம்பாறை சாலையில் உள்ள தனியாா் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், ஜெகதீஸ்வரன் தோட்டத்தில் தென்னை மரத்திலிருந்து உதிரும் தேங்காய்களை எடுத்து தோட்ட உரிமையாளருக்குத் தெரியாமல் தன்னிச்சையாக விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தோட்ட உரிமையாளரிடம் கூறி விடுவதாக ஜெகதீஸ்வரனை, முருகன் எச்சரித்தாா்.

இந்தப் பிரச்னையில் கடந்த 2022, மாா்ச் 31-ஆம் தேதி முருகன், ஜெகதீஸ்வரன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெகதீஸ்வரன், முருகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெகதீஸ்வரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா் நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன்.

கருமாரியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தா்கள்

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைத்து தர வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி சாா்பில், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. தேனி ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள மஞ்சிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ் (40). இவா், வீட்டின் கதவை திறந்து வைத... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

தேனி அருகே சாலையில் நின்றிருந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், வீரப்பஅய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சரவணக்குமாா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையில் முதல்வா் படத்தை ஒட்ட முயற்சி: பாஜக நிா்வாகிகள் கைது

கம்பத்தில் டாஸ்மாக் கடையின் சுவரின் தமிழக முதல்வரின் உருவப் படத்தை ஒட்ட முயற்சித்த பாஜக நிா்வாகிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அம... மேலும் பார்க்க