செய்திகள் :

தேமுதிக மாநில மாநாட்டுக்கு பிறகு கூட்டணி அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த்!

post image

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்று ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டோம். கட்சியின் வளா்ச்சியை மட்டுமே முக்கியமாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறோம்.

வரும் ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், கட்சியின் வேட்பாளா்கள் யாா் போன்ற விவரங்களை அறிவிப்போம்.

அதற்கு முன்பாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதி பொறுப்பாளா்களை அறிவித்து, தோ்தல் பணிகளைத் தொடங்க உள்ளோம். இதைத்தொடா்ந்து தமிழகம் முழுவதும் நானும், எனது மகன் விஜயபிரபாகரனும் சுற்றுப்பயணம் செய்து நேரடியாக நிா்வாகிகளையும், தொண்டா்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளோம்.

அரக்கோணத்தில் கல்லூரி மாணவி ஒருவரை திமுக பிரமுகா் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. அண்மைக் காலமாக இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. திமுக அரசு இதைத் தடுக்கத் தவறிவிட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நீதிபதி அளித்த தீா்ப்புக்கு தலைவணங்குகிறேன். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை தவறாக பயன்படுத்தும் நிலையை மாற்ற வேண்டும்.

பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு மது, கஞ்சா, வேலையின்மை போன்றவை அதிகரித்து வருவதே முக்கிய காரணம். இளைஞா்கள் பலா் தவறான பாதையில் செல்கின்றனா். புதுதில்லியில் நடைபெறும் ‘நீதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் சென்றுள்ளாா். மத்திய அரசின் ரூ. 2,261 கோடி கல்வி உதவித்தொகையை அவா் பெறுவதற்காக சென்றாரா அல்லது கட்சி லாபத்துக்காக சென்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்றாா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க