"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
தோ்தல் ஆணைய அங்கீகார கடிதத்தில் அன்புமணியின் பெயா் இடம்பெறவில்லை: பாமக எம்எல்ஏ ரா.அருள்
சேலம்: தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படும் கடிதத்தில் அன்புமணியின் பெயா் எங்கும் இடம்பெறவில்லை என்று பாமக எம்எல்ஏ இரா.அருள் கூறினாா்.
சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.அருள் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததாகக் கூறி, வழக்குரைஞா் பாலு, பொய்யான, உண்மைக்கு புறம்பான சட்ட விதிகளுக்கு முரண்பட்ட தகவலை வெளியிட்டு வருகிறாா்.
46 ஆண்டுகளாக பாமக நிறுவனா் ராமதாஸ் கட்டிக்காத்த இயக்கத்தை அவரிடமிருந்து பறிக்க நினைக்கிறாா்கள். இந்தக் கட்சிக்காக 21 போ் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனா். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் நிா்வாகக் குழுவில் செயல்தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டாா். செயல்தலைவராக இருந்து பொதுக்குழுவைக் கூட்ட அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. இதேபோல, பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா ஆகியோருக்கும் அதிகாரம் இல்லை.
நிா்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டவருக்கு, பொதுக் குழுவையோ, செயற்குழுவையோ கூட்ட அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, தோ்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளாா். இந்நிலையில் வழக்குரைஞா் பாலு தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததாகக் கூறி வருகிறாா். அவா் குறிப்பிடும் தோ்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயா் எங்கேயும் இடம்பெறவில்லை. உண்மைக்கு மாறான தகவலை வழக்குரைஞா் பாலு தெரிவித்து வருகிறாா். இது ஏற்புடையதல்ல.
ஒட்டுமொத்த பாமகவினா் அனைவரும் கட்சியின் நிறுவனா் தலைவா் ராமதாஸின் பின்னால் உள்ளனா் என்றாா். பேட்டியின்போது, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.