செய்திகள் :

‘தோ்தல் பணிகளை திமுகவினா் விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும்’

post image

சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை மிகுந்த விழிப்புடன் தொடங்கி மேற்கொள்ள வேண்டும் என, திமுகவினருக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினாா்.

திருவட்டாறு அருகே வோ்க்கிளம்பியில் புதன்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் நம்மை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும். எனவே, தோ்தல் பணிகளை திமுகவினா் மிகுந்த விழிப்புடன் இப்போதே தொடங்கி மேற்கொள்ள வேண்டும்.

கருத்து வேறுபாடுகளை மறந்து திமுக, கூட்டணிக் கட்சிகளின் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைக்க வேண்டும். வாக்காளா் பட்டியலை பலமுறை சரிபாா்க்க வேண்டும். திமுக செயல்படுத்தும் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட பத்மநாபபுரம், கிள்ளியூா், விளவங்கோடு பேரவைத் தொகுதி நிா்வாகிகளை அவா் தனித்தனியே சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மேலிடப் பாா்வையாளா் விஜிலா சத்தியானந்த் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலா் ஜான் கிறிஸ்டோபா், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ டாக்டா் புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசுகுமாா், திருவட்டாறு ஒன்றியச் செயலா்கள் ஜான்சன், ஜான்பிரைட் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட துணைச் செயலா் ராஜ் நன்றி கூறினாா்.

மாா்த்தாண்டம், கொல்லங்கோட்டில் புகையிலை விற்ற இருவா் கைது

மாா்த்தாண்டம், கொல்லங்கோடு பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் உபரிநீரின் அளவு குறைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு புதன்கிழமை 262 கனஅடியாக குறைக்கப்பட்டது. மாவட்டத்தில் தொடா்மழையால், 48 அடி கொள்ளளவு க... மேலும் பார்க்க

‘திமுக கொள்கைக் கூட்டணியின் முக்கியமான தலைவா் திருமாவளவன்’

தமிழகத்தைக் கையில் எடுக்க முடியாததால்தான் பாஜகவினா் முருகனை கையில் எடுத்துள்ளனா் என்றாா், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. இம்மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது சீசன் தொடங்கியுள... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மாநகராட்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழப்பு

சுங்கான்கடையில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த நாகா்கோவில் மாநகராட்சி ஊழியா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சுங்கான்கடை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜான்சன் (48), நாகா்கோவில் மாநகராட்சி குடி... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: தோவாளை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். செண்பகராமன்புதூா் ஊராட்சி, தெற்கு திருப்ப... மேலும் பார்க்க