செய்திகள் :

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர்: முகமது ரிஸ்வான்

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் விராட் கோலி: பாக். வீரர்

பாபர் அசாம்தான் சரியான நபர்

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நாளை விளையாடவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர் என அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முகமது ரிஸ்வான்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் ஆடுகளங்களின் தன்மையை ஆராய்ந்து பார்த்து, பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதே அணிக்கான சிறந்த முடிவாக இருக்கும் என நினைத்தோம். பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வீரர்கள் இல்லாமலில்லை. ஆனால், ஆடுகளங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு ஆலோசித்தபோது, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான தேர்வாக இருப்பார் என்ற முடிவுக்கு வந்தோம். தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் மிகவும் சிறப்பாக விளையாடக் கூடியவர். எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவர்தான் என்றார்.

இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி; ஷிகர் தவான் கூறுவதென்ன?

நியூசிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணி, பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக துபையில் நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி: ஷுப்மன் கில் சதம்! இந்தியா அபார வெற்றி!

துபை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல... மேலும் பார்க்க

முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்... மேலும் பார்க்க

அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்... மேலும் பார்க்க

அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள்... மேலும் பார்க்க

முகமது ஷமி 5 விக்கெட்டுகள்; இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விள... மேலும் பார்க்க

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்.! வங்கதேச வீரர்கள் புதிய சாதனை!

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்தியா- வங்கதேசம் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்று வ... மேலும் பார்க்க