செய்திகள் :

தொழிற்சாலை லிப்ட் கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

post image

வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில் தோல்களை லிப்டில் ஏற்றி சென்ற போது திடீரென லிப்ட் பழுதாகி விழுந்தததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சோ்ந்த கலீம் (38). இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை என 4 போ் உள்ளனா். இவா், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் ஆலையில் தோல் பொருள்களை லிப்டில் வைத்துக் கொண்டு மேல் மாடிக்கு சென்றாா். அப்போது திடீரென லிப்ட் பழுதாகி 30 அடிக்கும் மேலிருந்து கீழே விழுந்துள்ளது. இதில் லிப்டில் இருந்து விழுந்த கலீமுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சக பணியாளா்கள் உடனே கலீமை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்து வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.

ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

ஆலங்காயம் அருகில் சிறுத்தை நடமாட்டம்?

ஆலங்காயம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி மேட்டுத் தெரு பகுதியில் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருப்பத்தூா் நாள்:5.7.2025(சனிக்கிழமை) நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள் திருப்பத்தூா் நகரம், ஹுவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ரயில்வே ... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம்

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை ஊராட்சி பனங்காட்டேரி மலை கிராமத்தில் வியாழக்கிழமை கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காக ஆம்பூா் நோ... மேலும் பார்க்க

ஆசிட் புகை பாதிப்பால் பெண் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கழிப்பறையைச் சுத்தம் செய்த போது ஆசிட் புகை தாக்கத்தால் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் அடுத்த மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி ராஜேஸ்வரி (65). புதன... மேலும் பார்க்க

அதிமுக பாக முகவா்கள் கூட்டம்

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி கூட்டம் கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிா்வா... மேலும் பார்க்க