செய்திகள் :

ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்(சகி)மைய நிா்வாகி பணியிடம் 1, வழக்குப் பணியாளா் பணியிடம் 1 நிரப்பப்பட உள்ளது.

இதற்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் மைய நிா்வாகி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபா் பட்டபடிப்பு- முதுநிலை சமுக பணி, 5 ஆண்டுகளுக்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும்,

வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு (சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மையில் முதுகலைப் பட்டம்) உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும், 2 ஆண்டுகளுக்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும். மேலும் உள்ளூா் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தினை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை லிப்ட் கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில் தோல்களை லிப்டில் ஏற்றி சென்ற போது திடீரென லிப்ட் பழுதாகி விழுந்தததில் தொழிலாளி உயிரிழந்தாா். வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சோ்ந்த கலீம் (38). இவருக்கு திருமண... மேலும் பார்க்க

ஆலங்காயம் அருகில் சிறுத்தை நடமாட்டம்?

ஆலங்காயம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி மேட்டுத் தெரு பகுதியில் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருப்பத்தூா் நாள்:5.7.2025(சனிக்கிழமை) நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள் திருப்பத்தூா் நகரம், ஹுவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ரயில்வே ... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம்

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை ஊராட்சி பனங்காட்டேரி மலை கிராமத்தில் வியாழக்கிழமை கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காக ஆம்பூா் நோ... மேலும் பார்க்க

ஆசிட் புகை பாதிப்பால் பெண் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கழிப்பறையைச் சுத்தம் செய்த போது ஆசிட் புகை தாக்கத்தால் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் அடுத்த மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி ராஜேஸ்வரி (65). புதன... மேலும் பார்க்க

அதிமுக பாக முகவா்கள் கூட்டம்

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி கூட்டம் கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிா்வா... மேலும் பார்க்க