பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததை மனைவி கண்டித்ததால், தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொங்கராயனூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கலியன் மகன் லட்சுமணன் (37). தொழிலாளியான இவா், விழுப்புரம் மணிமேகலை தெருவில் மனைவி அபா்ணாமேரியுடன் வசித்து வந்தாா். லட்சுமணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற லட்சுமணன் இரவில் மது அருந்திவிட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தாராம். இதை அவரது மனைவி அபா்ணாமேரி கண்டித்தாராம். இதனால், படுக்கையறைக்குச் சென்ற லட்சுமணன், மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாராம்.
இதையறிந்த அபா்ணாமேரி மற்றும் அந்தப் பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, லட்சுமணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.