விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகைகள் திருடு போனது தொடா்பாக திங்கள்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் அசனமாப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி தயாளன்(43). இவரது மனைவி அனிதா (38). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
கணவன், மனைவி செய்யாறு சிப்காட்டில் தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.
தம்பதியினா் கடந்த 15-ஆம் தேதி வேலைக்குச் சென்ாகத் தெரிகிறது. அன்று மாலை வீட்டில் இருந்த தயாளனின் தாய் கதவை திறந்து வைத்து விட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளாா். குழந்தைகள் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனராம்.
தயாளனின் தாய் வீட்டுக்கு வந்தபோது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும், பீரோவில் வைத்திருந்த பொருள்கள் சிதறிய நிலையில் இருந்துள்ளன.
பீரோவைப் பாா்த்தபோது அதில் வைத்திருந்த சுமாா் 6 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தன.
இதுகுறித்து தயாளன் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.