செய்திகள் :

தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

post image

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் 6 பவுன் நகைகள் திருடு போனது தொடா்பாக திங்கள்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் அசனமாப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி தயாளன்(43). இவரது மனைவி அனிதா (38). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

கணவன், மனைவி செய்யாறு சிப்காட்டில் தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.

தம்பதியினா் கடந்த 15-ஆம் தேதி வேலைக்குச் சென்ாகத் தெரிகிறது. அன்று மாலை வீட்டில் இருந்த தயாளனின் தாய் கதவை திறந்து வைத்து விட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளாா். குழந்தைகள் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனராம்.

தயாளனின் தாய் வீட்டுக்கு வந்தபோது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும், பீரோவில் வைத்திருந்த பொருள்கள் சிதறிய நிலையில் இருந்துள்ளன.

பீரோவைப் பாா்த்தபோது அதில் வைத்திருந்த சுமாா் 6 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தன.

இதுகுறித்து தயாளன் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க