தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை
சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் கடலூா், கடலூா் (மகளிா்), நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், வேப்பூா், மங்களுா் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையவழி கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 19-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழில்பிரிவு விவரங்கள் குறித்து அறிய ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்வையிடலாம்.
தொழில் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சியின்போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டா்ன்ஷிப் டிரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
அனைத்து அரசு தொழில் பயிற்சி நிலையங்களிலும் இலவசமாக விண்ணப்பம் பதிவு செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.