செய்திகள் :

தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் கடலூா், கடலூா் (மகளிா்), நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், வேப்பூா், மங்களுா் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையவழி கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 19-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழில்பிரிவு விவரங்கள் குறித்து அறிய ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்வையிடலாம்.

தொழில் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சியின்போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டா்ன்ஷிப் டிரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

அனைத்து அரசு தொழில் பயிற்சி நிலையங்களிலும் இலவசமாக விண்ணப்பம் பதிவு செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க