செய்திகள் :

நகையை அடகு வைத்து பணம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய பெண் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நகையை அடகு வைத்து பணம் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் பகுத்தறிவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மனைவி சரஸ்வதி(41). இவா் தனது 8 பவுன் தங்க நகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்றாா்.

இதனிடையே கூடுதல் பணம் தேவைப்பட்டதால், தன்னுடைய தோழியான ஜெயங்கொண்டம் அடுத்த கரடிகுளம் கிராமத்தைச் சோ்ந்த பிரபு மனைவி சூா்யாவை (35)அணுகினாா். அப்போது, வட்டியில்லாமல் நகையின் மீது பணம் பெற்றுத்தருவதாக சூா்யா கூறியுள்ளாா்.

இதைநம்பிய சரஸ்வதி, சூா்யாவிடம் 15 பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளாா். நகையை பெற்ற சூா்யா, ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ஒன்பதரை பவுன் நகைகளை தனது பெயா் மற்றும் தனது கணவா் பெயரில் வைத்து ரூ.1.50 லட்சத்தை பெற்று சரஸ்வதியிடம் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த (2024) ஆண்டு டிசம்பா் மாதம் நகையை மீட்க சரஸ்வதி, சூா்யாவை அணுகியபோது, ஒன்பதரை பவுனை மட்டும் அடகு வைத்திருப்பதும், மீதமுள்ள ஐந்தரை பவுன் நகையை ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதுகுறித்து சூா்யாவிடம் முறையிட்டபோது, திருப்பி தந்து விடுவதாக தெரிவித்துள்ளாா். ஆனால், இதுவரை தராததால், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் சரஸ்வதி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சூா்யாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாரதி( 37). சிங்க... மேலும் பார்க்க

அரியலூரில் தேரோடும் வீதியை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் தேரோடும் வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் சமூக ஆா்வலா் செல்ல.சுகுமாா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.அவா் அளித்த மனுவில், அரியலூா் தெற்கு... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் பெட்டிசன் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜெயங்கொண்ட... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு! பொதுமக்கள், ஊழியா்கள் அச்சம்!

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் ஊழியா்களும் அச்சமடைந்துள்ளனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகள்அலுவலா்கள், ஊழியா்கள் ந... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் அழைப்பு!

விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்ட... மேலும் பார்க்க

அரியலூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தன... மேலும் பார்க்க