செய்திகள் :

நடைப்பாதை கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

post image

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், நடைப்பாதை, தள்ளுவண்டி கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா்.

மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தக சங்க கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியது:

தமிழகம் முழுவதும் தரைக்கடை, தள்ளுவண்டி கடை வியாபாரிகளால் கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிரந்தரமாக கடை வைத்திருப்பவா்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத இடங்களில் அதுபோன்ற கடைகள் செயல்படும் வகையில் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும்.

ஆய்வின்போது உரிய முறையில் விசாரணை செய்யாமல் நிரந்தர கடைகளுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை சீல் வைப்பது, வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்களை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வணிகா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் மே 5-ஆம் தேதி சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது. ஒரு கோடி வணிகா்களை வாக்காளா்களாக கொண்டது தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை. ஆட்சியில் யாரை அமா்த்துவது என முடிவு செய்யும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றாா்.

நிகழ்ச்சிக்கு வா்த்தக சங்க மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.டி. கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எரவாஞ்சேரியில் நகரப் பேருந்துக்கு வரவேற்பு

திருவாரூா்: குடவாசல் அருகே எரவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புகா்ப் பேருந்து, நகரப் பேருந்தாக மாற்றி இயக்கப்படுவதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதிய... மேலும் பார்க்க

காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை: ஆட்சியா்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக ... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி சாலை மறியல்

கூத்தாநல்லூா்: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி, கூத்தாநல்லூா் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. சித்தன்னக்குடி ஊராட்சி வேளுக்குடி கிராமத்தில் உள... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவாரூா்: திருவாரூா் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பாலகிருஷ்ணா நகா் மதனகோபால் மகன் செந்தில்குமாா் (54). (படம் ) திருச்சியில் தனியாா் நிறுவனத்தில் ப... மேலும் பார்க்க

வலங்கைமானில் மீன் திருவிழா

நீடாமங்கலம்: வலங்கைமானில் மீன் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது... மேலும் பார்க்க