செய்திகள் :

நமக்குள்ளே... - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘கொடூர’ தீர்ப்பு

post image

சில நீதிபதிகளின் அறம் பிறழ்ந்த தீர்ப்புகள், சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதுடன், ரௌத்திரம் கொள்ளச் செய்கின்றன. சமீபத்திய அதிர்ச்சி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை, 2021-ம் ஆண்டில் இரண்டு இளைஞர்கள் `லிஃப்ட்’ கொடுப்பதாக அழைத்துச் சென்று, மார்பை அழுத்தி, பைஜாமா (கால்சட்டை) கயிற்றை அவிழ்த்து, மறைவிடத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். பொதுமக்கள் சிலர் திரளவே, அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இது, புகாராகப் பதிவாகவே, அவர்கள் மீது ஐ.பி.சி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), போக்சோ சட்டப்பிரிவு 18-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாருக்கு ஆளானவர்கள், உயர் நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டின் மீதான தீர்ப்புதான்... அதிர்ச்சிகளை உருவாக்கியுள்ளது.

நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, ‘மார்பை அழுத்தினர், ஆடையை அவிழ்த்தனர் என்பதுதான் குற்றச்சாட்டு. இது பாலியல் வன்கொடுமை ஆகாது. பாலியல் வன்கொடுமை செய்யத் திட்டமிட்டதற்கான ஆதாரமும் இல்லை. சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை. இளைஞர்கள் ஆடை இல்லாமல் இருந்ததாக சாட்சி இல்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டுகளை வெறும் பாலியல் சீண்டலாகவே பார்க்க முடியும்’ என்று உத்தரவிட்டு, நீதித்துறையையும்கூட அதிர வைத்துள்ளார்.

கனம் கோர்ட்டார் அவர்களே... பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பதாலேயே, அந்தக் குற்றம் நீர்த்துவிடுமா? சம்பவ இடத்துக்கு மக்கள் வந்ததன் காரணமாகவே அவர்கள் தப்பியோடியுள்ளனர். இல்லையென்றால், அக்குழந்தை, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு பலியாகியிருக்கலாம், உயிரேகூட பறிக்கப்பட்டிருக்கலாம்.

நடந்திருப்பதே கொடூரம்... ஆனால், ‘அந்த அளவுக்குக் கொடூரம் இல்லை’ என்று ஒரு நீதிபதியே சொல்லியிருப்பது நீதி அல்ல, நீதிப் பிறழ்வு. சட்டங்களும், சட்டப்பிரிவுகளும் உருவாக்கப்படுவதன் நோக்கம், தண்டனைக்கான தெளிவான வரையறைக்காகவே தவிர, அதை ஓட்டையாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க வைப்பதற்கு அல்ல.

`உடலோடு உடல் உரசாத பாலியல் சீண்டல்... போக்சோ வழக்கின் கீழ் வராது’, ‘மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமில்லை’... என்றெல்லாம் முந்தைய காலங்களில் வெவ்வேறு நீதிமன்றங்களில் இருந்து தீர்ப்புகள் வந்துள்ளன. அந்த வரிசையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு, அதன் பரிணாம வளர்ச்சியே. இப்படியே போனால், முலை வரி, சீலை வரி, உடன்கட்டை ஏறுதல், பாலியல் விவாகம் உள்ளிட்டவற்றைகூட குற்ற நீக்கம் செய்துவிடுவார்களோ என்றுதான் அஞ்சத் தோணுகிறது தோழிகளே.

பாதிக்கப்பட்ட மக்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களோடும், சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய காக்கிகளுடனும் போராடுகிறார்கள்... நீதிபதிகளுடனுமா?

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ - ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவு... மேலும் பார்க்க

RTI: உள்ளே நுழையும் DPDP act பிரிவு 44 (3); பறிபோகும் ஆர்.டி. ஐ உரிமை... பிரச்னை என்ன? | Explainer

`மத்திய பட்ஜெட் - 2025' மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, வக்பு வாரிய விவகாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வர... மேலும் பார்க்க

"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதிலடி

தூத்துக்குடியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " 'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்ல... மேலும் பார்க்க

மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!

பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `இளையராஜாவுக்கு பாராட்டு விழா' - தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8-ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்திருந்தார்.லண்டனுக்குச் செல்லும் முன், இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிரா... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி; மீண்டும் ஓபிஎஸ்..? - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாதுஎன்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க