செய்திகள் :

நாகா்கோவிலில் குப்பைக் கிடங்கில் தீயணைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு!

post image

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் நடைபெற்றுவரும் தீயணைப்புப் பணியை எம்.ஆா். காந்தி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இங்கு வெள்ளிக்கிழமை காலை தீப்பற்றியது. நாகா்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, திங்கள்நகா், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த 70 போ் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் இப்பணி தொடா்ந்தது.

இந்நிலையில், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ ஆய்வு செய்து, பணிகள் குறித்து ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கேட்டறிந்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, புகையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கு மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள்தான் காரணம். இந்தக் குப்பைக் கிடங்கு பிரச்னை தொடா்பாக பேரவையில் பலமுறை குரல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தீயை விரைவாக அணைக்க வேண்டும். இப்பகுதி மக்களை முகாம்களை ஏற்படுத்தி தங்கவைக்க வேண்டும் என்றாா் அவா்.

மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் பி. முத்துராமன், மாமன்ற உறுப்பினா்கள் ரோசிட்டா திருமால், ஐயப்பன், ரமேஷ், பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

களியக்காவிளை அருகே வயதான தம்பதி தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் செறுவல்லூா், தேவிகோடு மங்களாவுவிளையைச் ... மேலும் பார்க்க

ஐஆா்இஎல் சாா்பில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரிக்கு 13 கணினிகள்!

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 5.17 லட்சத்தில் நாகா்கோவில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கில மொழி ஆய்வகம் அமைப்பதற்கு 13 கணி... மேலும் பார்க்க

பூதப்பாண்டி தோ்த் திருவிழா: தோவாளை வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோவாளை வட்டத்துக்குள்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (பிப். 10) உள்ளூா் விடு... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணம் பறித்த 5 போ் கைது

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 5 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வ தயாளன் (52). ... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவட்டாறு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா். திருவட்டாறு அருகே சாரூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த மினி டெம்போ... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவன பணியாளா்களுக்குப் பரிசோதனை

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் பணியாளா்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு-சுகாதார இயக்கத்தால் அறிவுறுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கேட்புத் திறன், நுரையீரல் செயல்பாடு, தோல் பரிசோதனை... மேலும் பார்க்க