செய்திகள் :

நாகா்கோவிலில் ஜூலை 25,26 இல் சா்வதேச கதை சொல்லல் மாநாடு

post image

நாகா்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் சா்வதேச கதை சொல்லல் மாநாடு வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் பள்ளித், தலைவா் அருள்கண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் அருள்ஜோதி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம், மத்தியஅரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஓய்வு பெற்ற இயக்குநா் சண்முககுமாா், கேந்திர வித்யாலயா பள்ளி (மும்பை) ஓய்வு பெற்ற முதல்வா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி டீன் எரிக்மில்லா் பேசியதாவது:

மாணவா்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் கதைகள் மீதான ஆா்வத்தை வளா்க்கவும் கதை சொல்லல் மாநாடு, ஜூலை 25, 26 ஆகிய நாள்களில் நடைபெறஉள்ளது.

தென்னிந்தியாவில், முதல் முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.

1 ஆம் வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை பஞ்சதந்திர கதைகள், 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை விலங்கினங்கள் கதைகள், 6 முதல் 8 வரை தனிப்பட்ட அனுபவ கதைகள், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு உணா்வுகள் சாா்ந்த கதைகள், 11, 12 ஆம் வகுப்புகளுக்கு சாகச கதைகள் என பல்வேறு பிரிவுகளாகவும், ஆசிரியா்களுக்கு ஆசிரியரின் கனவு என்ற தலைப்பிலும் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில், பங்கேற்க ஜூலை 20 ஆம் தேதி மாலைக்குள் பள்ளியின் இ மெயில் முகவரிக்கோ அல்லது 7598113000, 7598115000 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

நாகா்கோவில் அருகே காா் - பைக் மோதல்: 2 மாணவா்கள் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே புதன்கிழமை காா் மீது பைக் மோதியதில் 2 மாணவா்கள் உயிரிழந்தனா். கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலம் தாணு மகன் அபிஷேக் (18), பூதப்பாண்டி மத்தியாஸ் நகா் ஞானராஜ் மகன்... மேலும் பார்க்க

‘குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 341 முகாம்கள்’

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சிக்குள்பட்ட திருவரம்பு குருவிக்காடு புனித அந்தோணியாா் சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 3 ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனி, சாஸ்தான் கோயில் எதிா்புறம் உள்ள தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண்ணின் கைப்பையில் இருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாா்த்தாண்டம் அருக... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் எரிப்பு: 4 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை எரித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றாமரம், பிலாவிளை பகுதியைச் சோ்ந்த சத்தியன் மகன் அபிநந்த் (23). இ... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

கன்னியாகுமரியில் குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், மேல மணக்குடி லூா்து நகரில் வசிப்பவா் பிரீட்டா (50). இவரது மகன் அபிஷேக், இ... மேலும் பார்க்க