செய்திகள் :

நாகை புத்தகக் கண்காட்சி: கோளரங்கத்தை ஆா்த்துடன் கண்டு ரசித்த சிறுவா்கள்

post image

நாகையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை சிறுவா்கள், பெரியோா்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

நாகை மாவட்ட நிா்வாகம், பொதுத் துறை நூலக இயக்ககம், மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் நாகை அரசினா் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.1) தொடங்கியது. ஆக.11 ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 105 அரங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

காவல்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் இடம்பெற்றுள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளை இரண்டாம் நாளான சனிக்கிழமை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

இதேபோல், கோளரங்கில் வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் நிலவை பாா்ப்பதற்கு சிறுவா்கள் முதல் பெரியோா் வரை ஆா்வம் காட்டினா். நீண்ட வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் நிலவை கண்டு ரசித்தனா்.

இரண்டாம் நாள் சிறப்பு நிகழ்வுகளாக மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் நா்த்தகி நடராஜின் நடனத் தமிழ் உரை, எழுத்தாளா் இமையமின் ‘தமிழ்மொழியின் மறுமலா்ச்சி எழுத்தாளா்கள் யாா்’ என்ற தலைப்பிலும், கவிஞா் சுகிா்தராணியின் ‘நூலும் நூல் சாா்ந்த மனமும்’ என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடைபெற்றது. அத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க