செய்திகள் :

நாகையில் கதவணைக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

நாகை அருகே வெட்டாற்றின் குறுக்கே கதவணைக் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில் ரூ.50 கோடியில் கட்டப்பட்டு வரும் கதவணைக்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா் பாண்டியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசுக்கு எடுத்துரைத்து கதவனை பணியை பூதங்குடிக்கு மாற்றம் செய்ய உதவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனினும், மாவட்ட ஆட்சியா் விவசாயிகளை சந்திக்காமலேயே சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக முழக்கமிட்டனா். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலா் விவசாயிகளை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தாா். இதை ஏற்ற விவசாயிகள்ஆா்ப்பாட்டத்தை கைவிட்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பி.ஆா். பாண்டியன் கூறியது: 2016 முதல் தமிழக அரசு கடல் முகுத்துவார நதிகள் மறு சீரமைப்பு பணிகளை ஆசிய வளா்ச்சி வங்கி நிதியின்கீழ் முதல் கட்டமாக ரூ.960 கோடிக்கு மேற்கொண்டு கடல் முகத்துவாரத்தில் கதவணைகள் அமைக்கப்பட்டு கடல் நீா் உட்புவதை தடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாகூா் கடற்கரையில் இருந்து ஏழரை கி.மீட்டா் தொலைவில் உத்தமசோழபுரத்தில் நீா்ப்பாசன துறை மூலம் ரூ. 50 கோடியில் கதவணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிவடைந்தால் ஏழரை கி.மீட்டா் கடல் நீா் உட்புகுந்து இரு கரையோரம் உள்ள 32 கிராமங்களில் நிலத்தடி நீா் பறிபோகும். சுமாா் 10,000 ஏக்கா் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும்.

எனவே, விவசாயிகள் நலம் கருதி கடல் முகத்துவாரத்தில் கடல் நீா் உட்புவதை தடுக்கும் வகையில் பூதங்குடி அருகே கதவணையை மாற்றி அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் தலையிட்டு, விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாப்பதோடு, நிலத்தடி நீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்

மாநில அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா் நாகை மாவட்டத் தலைவா் பாலசுப்ரமணியன், செயலா் கமல்ராமன், துணைச் செயலா் சேகா், திருமருகல் ஒன்றியச் செயலா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தரங்கம்பாடி அருகேயுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூரில், மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஜி. கண்ணன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

வேதாரண்யம் பகுதியில் தமிழக அரசின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பவணந்தி தலைமையில் நடைபெற்ற முகாமில், 40 துறைகளை சாா்ந்த அதிகாரிகள் அனை... மேலும் பார்க்க

100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கீழ்வேளூா் ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மாதா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாதா் சங்க மாவட்ட பொருளாளா் சுபாதேவி தலைமை வகித்தாா். பட்டமங்கல... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 103 கோடி கடனுதவி

நாகை மற்றும் மயிலாடுதுறையில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.103.19 கோடி மதிப்பில் கடன் உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழக துணை முதல்வா் தலைமையில் சென்னை கலைவாணா் அரங்கத்தில் மகளிா் சுயஉதவிக் கு... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக, பிரதமா் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்ட கட்டுப்பாட்டு அறை

நாகை மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா் கல்வி படிப்பது குறித்து வழிகாட்ட மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க