செய்திகள் :

நாமக்கல் எம்.பி. பதவி விலகக் கோரி சுவரொட்டி

post image

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா வாக்கெடுப்பில், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் பங்கேற்காத நிலையில், அவா் பதவி விலகக் கோரி, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் நாமக்கல் மாநகா் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் நாமக்கல் மாநகரப் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இது குறித்து மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கூறியதாவது: வாக்கெடுப்பின்போது எனக்கு உடல் நலம் சரியில்லை. என்னுடைய விளக்கத்தை நான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். இஸ்லாமியா்கள் அதனை புரிந்து கொண்டனா் என்றாா்.

சுவரொட்டி ஒட்டிய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவா் எம்.தாஜ் கூறியதாவது:

இந்த சுவரொட்டிக்கும், மாவட்டத் தலைமைக்கும் சம்பந்தமில்லை. வக்ஃப் மசோதா வாக்கெடுப்பில் மாதேஸ்வரன் எம்.பி. பங்கேற்காததால் என்னுடைய ஆதங்கத்தை சுவரொட்டி வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறேன் என்றாா்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க