செய்திகள் :

நாமக்கல்லில் செயின் பறித்துக் கொண்டு காரில் தப்பிய திருடன் கரூரில் கைது

post image

நாமக்கல்லில் செயின்பறிப்பில் ஈடுபட்டு, கரூருக்கு காரில் தப்பித்து வந்த திருச்சியைச் சோ்ந்த திருடனை கரூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த வலையபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தாயும், மகளும் வந்தபோது, திடீரென காரில் வந்த மா்ம நபா் இருசக்கர வாகனத்தை மறித்து, தாயிடம் இருந்த மூன்றரை பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினாா். இதனைக்கண்ட அப்பகுதியினா் மோகனூா் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து மோகனூா் போலீஸாா் ஜீப்பில் காரை பின்தொடா்ந்துவந்தனா். அப்போது காா் மோகனூரில் இருந்து வாங்கல் காவிரி ஆற்றுப்பாலம் வழியாக கரூரை நோக்கிச் செல்வதாக கரூா் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து கரூா் பசுபதிபாளையம் போலீஸாா் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், போக்குவரத்து ஆய்வாளா் நந்தகுமாா் ஆகியோா் காந்திகிராமம் பகுதியில் திருச்சி சாலையில் தடுப்பு அமைத்து திருடனை பிடிக்க தயாராக இருந்தனா்.

இதையடுத்து அந்த காா் வந்தபோது நிறுத்திய போலீஸாா் காா் கண்ணாடியை உடைத்து உள்ளே காரில் இருந்த அந்த நபரை கைது செய்தனா். பின்னா் போலீஸாா் அவரிடம் விசாரித்தபோது, திருச்சி பெரியமிளகுபாறையைச் சோ்ந்த வெங்கட்ராமன்(37) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த சங்கிலியையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா் பின்னா் மோகனூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கரித்துகள்கள் வெளியேறி வீடுகளில் படிந்தது! டிஎன்பிஎல் ஆலையை பொதுமக்கள் முற்றுகை

டிஎன்பிஎல் ஆலையில் இருந்து வெளியேறிய கரித்துகள்கள் வீடுகளில் படிந்ததால் பொதுமக்கள் புதன்கிழமை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம் காகித ஆலையில், ஆலையில் காகிதம் தயாரிக்க பயன்... மேலும் பார்க்க

பிறப்புச் சான்றிதழில் பெயரை திருத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடவூா் வட்டாட்சியா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயரை திருத்தம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடவூா் வட்டாட்சியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கடவூா் தா... மேலும் பார்க்க

குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் கரூ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் புகுந்து மனைவியை கொன்றவா் கைது

குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், தண்ணீா்பள்ளி அருகே உள்ள பட்டவ... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: கரூா் புதிய எஸ்.பி.

கரூா் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா் கரூா் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கே. ஜோஷ் தங்கையா. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை... மேலும் பார்க்க

கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கரூரில் கொங்கு மேல்நிலைப் பள்ளி, காஸ்பரோ செஸ் அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டிகொங்கு ... மேலும் பார்க்க