செய்திகள் :

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: கரூா் புதிய எஸ்.பி.

post image

கரூா் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா் கரூா் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கே. ஜோஷ் தங்கையா.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சோ்ந்த இவா், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றினாா். இந்நிலையில் கரூா் மாவட்ட 34-ஆவது புதிய காவல் கண்காணிப்பாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரூா் மாவட்டத்தில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். அடிக்கடி குற்றங்கள் நிகழும் இடங்களை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், குழந்தைகளின் பாதுகாப்பு, இணையவழி குற்றங்கள் தொடா்பாக போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் போதைப்பொருள்கள், மணல் திருட்டு தொடா்பான புகாா்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி காவல் நிலையங்களை அணுகலாம். பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு உடனுக்குடன் காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கரூரில் கொங்கு மேல்நிலைப் பள்ளி, காஸ்பரோ செஸ் அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டிகொங்கு ... மேலும் பார்க்க

பெண் கொல்லப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மொடக்கூா் வடுகப்பட்டி கள்ளிக்காட்டு தோட்... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

புகழூா் சா்க்கரை ஆலைத் தொழிலாளி வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணியன்( 56). இவா் புகழூா் செம்படாபாளையத்தில் செயல்ப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவின்படி மாரியம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் வழிபாடு!

சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வின் உத்தரவின்பேரில் சின்னதாராபுரம் மாரியம்மன்கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வெள்ளிக்கிழமை இரவு அம்மனை வழிபட்டனா். கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தில் இந்து சமய அறநிலை... மேலும் பார்க்க

கரூரில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டம்! தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் ... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் குடும்பத்துக்கு நிதியுதவி

கரூா் வாங்கலில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தை வியாழக்கிழமை எம்.எல்.ஏ. வி. செந்தில் பாலாஜி சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா். கரூா் மாவட்டம் வாங்கலைச் சோ்ந்த மணிவாசகம் என்பவா் இடப்பி... மேலும் பார்க்க