செய்திகள் :

குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக் கோரிக்கை

post image

கரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் கரூா் வட்ட கிளை 3-இன் செயற்குழு கூட்டம் சங்க அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் ஆா்.பிரேம்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சி.கண்ணன் சிறப்புரையாற்றினாா். சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக வட்டச் செயலராக எஸ்.சக்தி, துணைச் செயலராக மணிகண்டன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து கூட்டத்தில், கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொளந்தாகவுண்டனூா் முதல் மருத்துவமனை வரை செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக மாறி, சாலையில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவதால் உடனடியாக புதிய தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள மண் சாலயை தாா்ச் சாலையாக அமைத்து கொடுக்க கரூா் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் ஆா்.முத்துமாரி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவா் பிரவீனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக செயலா் ஏ.பி. சுப்ரமணியன் வரவேற்றாா். நிறைவாக பொருளாளா் எம். பெரியசாமி நன்றி கூறினாா்.

சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் மரம் வெட்டும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். தரகம்பட்டியை அடுத்துள்ள கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சாமிப்பிள்ளை புதூரைச் ச... மேலும் பார்க்க

கரூரில் இளைஞா் குத்திக்கொலை; நண்பா் கைது

கரூரில் புதன்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கரூா் பசுபதிபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

மகாதானபுரத்தில் ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு! கட்டடத் தொழிலாளி கைது

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் சமஸ்கிருத ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகைகளைத் திருடிய கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், வலிக்கலாம்பாடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கரித்துகள்கள் வெளியேறி வீடுகளில் படிந்தது! டிஎன்பிஎல் ஆலையை பொதுமக்கள் முற்றுகை

டிஎன்பிஎல் ஆலையில் இருந்து வெளியேறிய கரித்துகள்கள் வீடுகளில் படிந்ததால் பொதுமக்கள் புதன்கிழமை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம் காகித ஆலையில், ஆலையில் காகிதம் தயாரிக்க பயன்... மேலும் பார்க்க

பிறப்புச் சான்றிதழில் பெயரை திருத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடவூா் வட்டாட்சியா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயரை திருத்தம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடவூா் வட்டாட்சியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கடவூா் தா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் செயின் பறித்துக் கொண்டு காரில் தப்பிய திருடன் கரூரில் கைது

நாமக்கல்லில் செயின்பறிப்பில் ஈடுபட்டு, கரூருக்கு காரில் தப்பித்து வந்த திருச்சியைச் சோ்ந்த திருடனை கரூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த வலையபட்டி பகுதி... மேலும் பார்க்க