செய்திகள் :

நாம் தமிழர் கட்சியினர் விலகக் காரணம் என்ன? சீமான் விளக்கம்!

post image

சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து உறுப்பினர்கள் விலகி வருகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை, ஆகவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது என மதுரையில் சீமான் பேட்டி

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில் "மும்மொழிக் கொள்கையில் திமுக, அதிமுகவின் நிலைப்பாடு என்ன?, மும்மொழிக் கொள்கையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?, முதன் முதலில் ஹிந்தியை திணித்தது யார்? ஹிந்தியை திணித்தவர்களிடம் திமுக கூட்டணி வைத்து வெற்றியும் பெற்றுள்ளது.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் ஹிந்தி இல்லை?, ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சிறப்பு, இந்த நாட்டை பாஜக துண்டிக்க துடிக்கிறது, ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் மொழி வாரியாக மாநிலங்கள் எதற்காக பிரிக்கப்பட்டது?

ஹிந்தி மொழி பயில வேண்டும் என்றால் அதற்கான சிறப்பு காரணங்கள் என்ன?, இந்திய மொழி ஹிந்தி என எந்த சாசனத்தில் உள்ளது, இந்தியா பழமொழி பேசும் மக்கள் ஒன்றினைந்த ஐக்கியம், ஹிந்தி மொழி கற்பித்தல் மிகவும் ஆபத்தானது, நாடு எங்கும் ஹிந்தி மொழியை திணிப்பது தேவையற்றது, இரண்டு மூன்று மாநிலங்களில் பேசக்கூடிய ஹிந்தி மொழியை திணிக்க நினைப்பது தவறு, ஹிந்தி மொழி தேவையெனில் கற்றுக் கொள்ளலாம், ஹிந்தி மொழி விவகாரத்தில் திராவிடர்களை நம்ப வேண்டாம், ஹிந்தி மொழியை திமுக உளமார எதிர்க்கிறதா?, ஹிந்தி திணிப்புக்கு எதிராக 800 பேர் போராடினார்கள், ஆனால் 18 பேர் என கணக்கு காட்டினார்கள்.

நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காக கட்சி என செயல்பட வேண்டும், சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள், நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்படுவேன், நான் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை.தமிழ் தேசியம் எனும் பெருங்கடலில் வலை வீசுகிறேன்.

திராவிடம் பேசாமல் பெரியார் குறித்து பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே நான் செல்லவில்லை, ஆகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது" என கூறினார்.

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி: முதல்வர் ஸ்டாலின்

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.சர்வதேச தாய்மொழி நாளையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டின் விளக்கப் பாடலை பத... மேலும் பார்க்க

கறைபடிந்த அமைச்சரவை: அண்ணாமலை குற்றச்சாட்டு

கறைபடிந்த அமைச்சரவையை மக்கள் விரைவில் தோற்கடிப்பார்கள் எனப் பதிவிட்டு ’கெட் அவுட் ஸ்டாலின்’ டிரெண்டிங்கை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார்.மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்து... மேலும் பார்க்க

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க