செய்திகள் :

நாளை இ.பி.எஃப் குறைதீா் கூட்டம்

post image

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுகிறது.

‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை கீழ்கண்ட இடங்களில் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

1. வேலூா், வேலூா், ஊரீஸ் கல்லூரி, கூட்டுறவு வளாகம், 1ஏ, அண்ணா சாலை, கொசப்பேட்டை, வேலூா்-632 001.

2. வேலூா், திருவண்ணாமலை, எச்எச் 611, மேல்புழுதியூா், பிஏசிசிஎஸ் லிமிடெட், செங்கம்-606 709.

3. வேலூா், ராணிப்பேட்டை, வி.கே.வி மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு ரோடு, வாலாஜாபேட்டை-632 513.

இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், பதிவேற்றுதல் செய்யப்படும்.

எனவே, முதலாளிகள், ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் மு... மேலும் பார்க்க

தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு

குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்... மேலும் பார்க்க

ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபா... மேலும் பார்க்க

பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலி... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா். அம்பத்... மேலும் பார்க்க