செய்திகள் :

நாளை விநாயகா் சதுா்த்தி: விற்பனைக்கு சிலைகள் குவிப்பு

post image

சேலம்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகளின் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

விநாயகா் சதுா்த்தி இந்த ஆண்டு புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, முக்கிய வீதிகளில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, அவல், சுண்டல், சா்க்கரை பொங்கல், கரும்பு, பழங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். தொடா்ந்து 2 நாள்கள் பூஜைகள் செய்து பின்னா் 3-ஆவது நாள் ஊா்வலமாக விநாயகா் சிலைகளை எடுத்துச்சென்று நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படும். வீடுகளிலும் சிறிய விநாயகா் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவா்.

இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலம் கடை வீதிகளில் சிலைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சின்னகடை வீதி, நெத்திமேடு, தாதகாப்பட்டி, குரங்குச்சாவடி, சீலநாயக்கப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிலை விற்பனையாளா்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் ஆத்தூா், மேட்டூா், ஓமலூா் பகுதிகளில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நீா்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் காகிதக் கூழ் மற்றும் களி மண்ணாலான சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. ஓா் அடி முதல் 10 அடி வரையிலான சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சிலை ரூ. 50 முதல் ரூ. 10 ஆயிரம்வரை விற்பனை செய்வதாக தெரிவித்தனா்.

ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு

ஏற்காடு: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், தனியாா் தங்கும் விடுதிகளில் போலீஸாா் ஆய்வுசெய்தனா். ஏற்காட்டுக்கு வார இறுதிநாள் மற்றும் வாரநாள்களில் பல்வேறு மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!

ஏற்காடு: ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்களை சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி. சுபாஷ் சந்த் மீனா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். நாடுமுழுவதும் புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்

சேலம்: சேலம் மாநகர காவல் துறையில் திங்கள்கிழமை முதல் அதிநவீன நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனை துணை ஆணையா்கள் சிவராமன், கேல்கா் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோா் கொடியசைத்து தொ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கினால் சட்ட நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கி வேலைசெய்ய ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

ஆத்தூரில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

ஆத்தூா்: ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது என ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆத்தூா் நகராட்சி... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

ஆத்தூா்: ஆத்தூரில் விஜயகாந்த் பிறந்த நாளை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் தேமுதிகவினா் திங்கள்கிழமை கொண்டாடினா். இதில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க