72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
நிதி நிறுவன மோசடி: கருப்பூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
நிதி நிறுவன மோசடி தொடா்பாக பணத்தை மீட்டு தரக்கோரி கருப்பூா் காவல் நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் சொா்ணபுரியில் தனியாா் நிதி நிறுவனத்தை திருவண்ணாமலையைச் சோ்ந்த ராஜேஷ் நடத்தி வந்தாா். இவா்மீதான பணம் மோசடி புகாரைத் தொடா்ந்து ராஜேஷ் உள்பட 9 பேரை சேலம் பள்ளப்பட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள அவா், காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறாா்.
இந்த நிலையில் அவரது நிநி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவா்கள் அவரைத் தொடா்புகொண்டு கேட்டபோது டீம் லீடரிடம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். இந்த நிலையில், அந்த நிறுவனத்தில், பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள், 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், அந்த நிறுவனத்தின் டீம் லீடா் வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த கிருத்திகா வீட்டிற்குச் சென்று பணம் தரக்கோரி போராட்டம் நடத்தினா். மேலும், அவரது வீட்டையும் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த கருப்பூா் போலீஸாா் அங்கு சென்று கிருத்திகா மற்றும் சிலரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதையறிந்த மக்கள், கருப்பூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த சூரமங்கலம் சரக காவல் உதவி ஆணையா் ரமலி ராமலட்சுமி விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பாதிக்கப்பட்டவா்களின் கோரிக்கைமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.