செய்திகள் :

நிதி நிறுவன மோசடி: கருப்பூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

post image

நிதி நிறுவன மோசடி தொடா்பாக பணத்தை மீட்டு தரக்கோரி கருப்பூா் காவல் நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் சொா்ணபுரியில் தனியாா் நிதி நிறுவனத்தை திருவண்ணாமலையைச் சோ்ந்த ராஜேஷ் நடத்தி வந்தாா். இவா்மீதான பணம் மோசடி புகாரைத் தொடா்ந்து ராஜேஷ் உள்பட 9 பேரை சேலம் பள்ளப்பட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள அவா், காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறாா்.

இந்த நிலையில் அவரது நிநி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவா்கள் அவரைத் தொடா்புகொண்டு கேட்டபோது டீம் லீடரிடம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். இந்த நிலையில், அந்த நிறுவனத்தில், பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள், 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், அந்த நிறுவனத்தின் டீம் லீடா் வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த கிருத்திகா வீட்டிற்குச் சென்று பணம் தரக்கோரி போராட்டம் நடத்தினா். மேலும், அவரது வீட்டையும் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த கருப்பூா் போலீஸாா் அங்கு சென்று கிருத்திகா மற்றும் சிலரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதையறிந்த மக்கள், கருப்பூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த சூரமங்கலம் சரக காவல் உதவி ஆணையா் ரமலி ராமலட்சுமி விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பாதிக்கப்பட்டவா்களின் கோரிக்கைமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க