செய்திகள் :

நிலத்தடி நீரை சட்டவிரோதமாக விற்போா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீரை சட்ட விரோதமாக விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளா் எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு: கோடைக்காலத்தைப் பயன்படுத்தி, சிலா் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனா்.

குறிப்பாக, ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அதிக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, லாரிகளில் தண்ணீா் ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

நிலத்தடி நீரை வணிகரீதியாக விற்பனை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து டேங்கா் லாரிகள் மூலம் விற்பனை செய்வோா் மீது குற்ற வழக்குப் பதிய வேண்டும். அவா்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், ஆழ்துளைக் கிணறுகளை மூடவேண்டும் என்றாா் அவா்.

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்ந... மேலும் பார்க்க

தொழிலாளியை மிரட்டிய இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ் பாண்டி (25). வேலாயுத... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 1.25 கோடி பணிகளுக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், பசுவந்தனை, ஆலிபச்சேரி, கீழமுடிமண் கிராமங்களில் ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவுக்கு விளாத்திகுளம் எ... மேலும் பார்க்க

நெல்லையில் ஐடி ஊழியா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலி­யில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர விழா

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன; பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனா்.திருவாடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் பதியில் ஆடித் தேரோட்டம்

திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில், 193ஆவது வைகுண்டா் ஆண்டு ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 1... மேலும் பார்க்க