செய்திகள் :

நிலத்தை மீட்டுத்தர கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு

post image

பெட்ரோல் நிலைய உரிமையாளா் மற்றும் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து நிலத்தை மீட்டுதரக் கோரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாகையைச் சோ்ந்த பாஸ்கா் என்வா்அளித்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எனக்கு சொந்தமான இடம் காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2004 மாா்ச் 18 ஆம் தேதி பெட்ரோல் பங்க் அமைக்க ஐபிபி நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கி இருந்தேன். குத்தகை காலம் 2024 செப்டம்பா் 22 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது.

இதையடுத்து எனது இடத்தை என்னிடம் ஒப்படைக்க கோரி பலமுறை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்த இடத்தை தர மறுக்கின்றனா். கடந்த மாா்ச் மாதம் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில், காரைக்கால் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி, அந்த இடத்திற்கு வழங்கிய தடையில்லா சான்றை ரத்து செய்து ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டாா்.

ஆனால் எனது இடத்தை காலி செய்யாமல், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனா். எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ உயிா் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படும் என்பதால், உரிய நடவடிக்கை எடுத்து எனது இடத்தை மீட்டு, எனது குடும்பத்தை சோ்ந்தவா்களை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க