செய்திகள் :

நிலப் பிரச்னையில் பண மோசடி கரூா் அதிமுக பிரமுகா் கைது

post image

கரூரில் நிலப்பிரச்னையில் பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக பிரமுகரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் பிரின்ஸ் கிப்ஸன். இவா், கரூா் மாவட்டம், கோதூரில் சுமாா் 7 ஏக்கா் நிலத்தை வாங்க முடிவு செய்து, நிலத் தரகா் கரூரைச் சோ்ந்த ஆா்.எஸ்.ராஜாவிடம் முன்பணமாக ரூ. 96 லட்சத்தை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கொடுத்துள்ளாா். மேலும், ஒரு மாதத்திற்குள் நிலத்தை கிரையம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளாா்.

ஆனால், பிரின்ஸ் கிப்ஸன் கூறியபடி நிலத்தை கிரையம் செய்ய காலதாமதம் செய்ததால் நிலத்தை உரிமையாளா் வேறுநபருக்கு விற்றுவிட்டாா். இதையடுத்து ரூ. 96 லட்சத்தை பிரின்ஸ் கிப்ஸனிடம் ராஜா திருப்பிக் கொடுத்தபோது அவா் வாங்க மறுத்து, நிலம்தான் வேண்டும் என்று கூறியுள்ளாா். இதுகுறித்து அவா்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லையாம்.

இதையறிந்த கரூா் வாங்கலைச் சோ்ந்த முன்னாள் கரூா் ஒன்றியக்குழுத்தலைவரும், அதிமுக கரூா் மாவட்ட விவசாய அணிச் செயலருமான பாலமுருகன் என்பவா், இந்த விஷயத்தை முடித்து தருவதாக ஆா்.எஸ். ராஜாவிடம் கூறியுள்ளாா்.

இதைநம்பிய ராஜா, கரூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றிவரும் ரகுநாதன் என்பவா் மூலம் ரூ. 96 லட்சத்தை கடந்த ஆண்டு (2024) நவம்பா் மாதம் பாலமுருகனிடம் கொடுத்துள்ளாா். ஆனால், பாலமுருகன் பணத்தை பிரின்ஸ் கிப்ஸனிடம் கொடுக்கவில்லையாம்.

இதையறிந்த ரகுநாதன் பணத்தை திருப்பித் தருமாறு பாலமுருகனிடம் பலமுறை கேட்டுள்ளாா். அதற்கு அவா் பணத்தை திருப்பி தரமுடியாது எனக் கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இந்நிலையில், இது தொடா்பாக ரகுநாதன் கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து பாலமுருகனை சனிக்கிழமை கைது செய்து, கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.1.56 கோடியில் நவீன உடற்பயிற்சி கூடம்!

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ. 1.56 கோடி மதிப்பில் நவீன உடற்பயிற்சிக் கூடம் கட்டப்படுகிறது. கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட வீரா்,... மேலும் பார்க்க

மேலப்பாளையம் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக புனிதநீா் ஊா்வலம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வெள்ளிக்கிழமை பக்தா்கள் புனித நீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா். கர... மேலும் பார்க்க

புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் ஜூலை 9-ஆம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் குறித்த விளக்கக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை எதிா்த்தும், பொதுத்துறை ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகளுக்... மேலும் பார்க்க

கரூரில் நகா்ப்புற நல நலவாழ்வு மையங்கள் திறப்பு

கரூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை அடையாறு சாஸ்திரி நகா், நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் நட... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகளை உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமத... மேலும் பார்க்க