U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
மேலப்பாளையம் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக புனிதநீா் ஊா்வலம்
கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வெள்ளிக்கிழமை பக்தா்கள் புனித நீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு விநாயகா் வழிபாடு, மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
தொடா்ந்து காலை 8.05 மணிக்கு புலியூா் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் புனிதநீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
தொடா்ந்து மாலையில் வாஸ்துசாந்தியும் நடைபெற்றது.
இதில் தட்டைநாடு புலியூா் பெருங்குடி குல குடிப்பாட்டு மக்கள் மற்றும் மேலப்பாளையம் திருப்பணிக்குழுவினா் பங்கேற்றனா்.
தொடா்ந்து சனிக்கிழமை சாந்தி திசா ஹோமம், முதல்கால யாக பூஜையும், 6-ஆம்தேதி இரண்டாம்கால யாக பூஜை, பூா்ணாகுதி மற்றும் 3-ஆம் கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் நிகழ்ச்சியும், 7-ஆம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு 4-ஆம் கால யாக பூஜையும், பின்னா் யாத்ராதானம், கடம்புறப்பாடும், காலை 6.30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.